Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 28 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையகம் முழுவதும் தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக ஏற்றப்பட்டு வரும் நிலையில், ”தடுப்பூசிகளை ஏற்றிய மறுநாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென” மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தோட்டக்கம்பனிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றிய பின்னர் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.அதோடு இது மழைக்காலம் என்பதால் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி ஏற்றிய பின் குளிக்க கூடாதென வைத்தியர்கள் அறிவுறுத்துகின்ற நிலையில், மழையில் நனைந்து கொண்டு தொழிலில் ஈடுபடுவதால் ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடும்.
எனவே தடுப்பூசி ஏற்றிய தோட்டத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றிய மறுநாள் விடுமுறை
வழங்க வேண்டுமென கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago