2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவரை, நேற்று புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக வெள்ளவாய பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நகரை அண்மித்த பிரதேசமொன்றிலுள்ள வீட்டில் பதுங்கியிருந்த வேளையே இந்த  ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மொனராகல, வெள்ளவாய உட்பட நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

வெள்ளவாய, மொனராகல மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை மொனராகல மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெள்ளவாய பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .