2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கஜமுத்து வைத்திருந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.எம். ரிஃபாத்

சட்ட விரோதமான முறையில் கஜமுத்துக்களைக் கொண்டுச் சென்ற சந்தேக நபரை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்ற நீதவான்,  ஞாயிற்றுக்கிழமை  (13) உத்தரவிட்டார்.

பெறுமதி வாய்ந்த நான்கு கஜமுத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் கொண்டுச் செல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவரை, எத்கம என்ற இடத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (12), அரநாயக்க பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேற்படி சந்தேக நபரிடமிருந்து வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்ட  பொலிஸார், அந்நபரை நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்திய போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .