2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கஞ்சா, மதனமோதகத்துடன் இளைஞன் கைது

Kogilavani   / 2017 ஜூன் 30 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

கஞ்சா மற்றும் மதன மோதக விற்பனையில் ஈடுபட்டுவந்த 20 வயது இளைஞனை, பூஜாபிட்டிய பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

பூஜாபிட்டி,ய  பொனக்காவல  பிரதேசத்தில் பாதை செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வந்த இவ்விளைஞன்,  பதுளை  பிபிலையிலிருந்து கஞ்சாவையும் மதனமோதக்தையும் கொண்டுவந்து விற்பனை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .