2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கணவரின் பணியை முன்னெடுத்த கர்ப்பிணி கைது

Ilango Bharathy   / 2021 ஜூலை 12 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட கர்ப்பிணியொருவரும் மற்றொரு நபரும் இசலு
மஹியாவ பிரதேசத்தில் வைத்து, கண்டிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போது, கர்ப்பிணியிடமிருந்து 2 கிராம் 420 மில்லிகிராம்
ஹெரோய்னும் மற்றைய சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோய்னும்
கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் இதற்கு முன்னரும்போதைப்பொருள் விநியோகம் தொடர்பில்,
குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்கள் என்றும், குறித்த கர்ப்பிணியின் கணவரும்
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .