Editorial / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை (11) நிலவரப்படி 240 பேரிடர் இறப்புகள் மற்றும் 75 பேர் காணாமல் போனதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்டி மாவட்ட பிரதி ஆணையாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை (11) நிலவரப்படி 54,988 குடும்பங்களைச் சேர்ந்த 1,89,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
20,155 குடும்பங்களைச் சேர்ந்த 70,282 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 6,097 குடும்பங்களைச் சேர்ந்த 21,456 பேர் 261 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதி ஆணையாளர் இந்திக ரணவீர மேலும் தெரிவித்தார். 12,974 குடும்பங்களைச் சேர்ந்த 45,732 பேர் உறவினர் வீடுகளில் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கண்டி மாவட்டத்தில் 2263 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 14,735 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் ரணவீர மேலும் தெரிவித்தார்.
9 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
01 Feb 2026
01 Feb 2026