2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கல்வி காரியாலய கட்டடம் திறப்பு

Sudharshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் 270 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெஹியோவிட்ட வலய கல்வி காரியாலயத்துக்கான கட்டடத்தொகுதி செவ்வாய்க்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டது.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 27 கல்வி வலய காரியாலயங்களையும் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபை உறுப்பினர்களான அஜித் சாமிந்த, நிஹால் பாருக், மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குரப்பு ஆராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .