2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கலஹாவில் கைதுசெய்யப்பட்ட 7 பேருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கலஹா வைத்தியசாலையின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில், நேற்று (1)  கைதுசெய்யப்பட்ட எழுவரையும், எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (2) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி காலை,  கலஹா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட 2 வயதுக் குழந்தையொன்று, பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஆத்திரமுற்ற பிரதேச மக்கள், வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட எழுவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .