2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலேவெலவில் விருதுகள் வழங்கும் நிகழ்வு

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெலீல்

புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டியும், இலக்கியத்துறை சமூகத்துறைகளில் பங்களிப்பு நல்கும் ஆர்வலர்களைப் பாராட்டியும்,   மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கதை ,கவிதை , கட்டுரை , பேச்சு ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களும் பாராட்டியும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வும், கலேவெல தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 12ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8  மணிக்கு நடைபெறவுள்ளது 

இந்நிகழ்வை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும்   இலங்கை இளம் எழுத்தாளர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மாத்தளை மாவட்ட இணைப்பாளரும் சம்மேளன தலைவருமான எம் நிஜாமுதீன் , செயலாளர் ஏ.காதிர்கான்  இணைப்பாளர் ரசீத் எம் ரியாழ் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .