2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கழிவு நீரால் பதுளை நகரில் துர்நாற்றம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாநகரில் பெருமளவிலான வர்த்தக நிலையங்களின் மலசலகூட கழிவு நீரினை, நகரின் வீதியின் இரு மருங்கிலுமுள்ள வடிகான்களுக்கு திருப்பிவிடுவதினால் நகரில் துர்நாற்றம் வீசுவதாக பதுளை மாநகர மேயர் உபாலி நிசங்க குணசேகரவிடம் தெரிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாநகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அலுவல் நிமித்தம் வருகை தந்திருந்த பதுளை மாநகர மேயரிடம், வர்த்தக நிலைய உரிமையாளர் மேற்படி விடயம் குறித்து கூறியதுடன், கழிவு நீர் வடிந்தோடும் வடிகானையும்; காண்பித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X