2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கவரவிலயில் பதற்றம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், செ.தி.பெருமாள்

மஸ்கெலியா சாமிமலை, கவரவில சந்தியில்  இன்று பகல் இடம்பெற்ற விபத்தையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த முத்தையா அமரஜோதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாமிமலையிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த மேற்படிப் பெண், கவரவில சந்தியில் வைத்து பஸ்ஸிலிருந்து இறங்கி, வீதியை கடக்க முயன்றபோது, தான் பயணித்த அதே பஸ்ஸில் மோதுண்டு, பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து பிரதேச மக்கள் கவரவில சந்தியில் ஒன்றுத்திரண்டதுடன், கற்களை எறிந்து குறித்த பஸ்ஸை சேதப்படுத்தியதால் அப்பகுதயில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பொலிஸாரின் தலையீட்டையடுத்து, நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .