2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கவரவல தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மஸ்கெலியா ஹொரணப் பிளான்டேஷனுக்கு உட்பட்ட சாமிமலை கவரவல தோட்டப் பிரிவைச் சேர்ந்த 400 தொழிலாளர்கள், இன்று (27)  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தோட்டத்தின் உள்வீதிகள் செப்பனிடப்பட வேண்டும்; தோட்டத்தில் அம்பியூலன்ஸ் வண்டிச் சேவையை விஸ்தரிக்க வேண்டும்; தேயிலைத் தோட்டங்கள் காடாகிக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும்; தோட்டத்தில் புதிய இளைஞர்களின் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும்; தேயிலைச் செடிகளுக்குள் காடுகளைப் போன்று வளர்ந்துக் கிடக்கும் புற்களை வெட்டி அகற்ற வேண்டும்; தேயிலைச் செடிக்கு உரமிடுதலைத் துரிதப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, இப்பணிப்புறக்கணிப்பில் இத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, தோட்டத்தின் உதவி முகாமையாளரிடம் கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .