2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கஹவத்தை விபத்தில் 11 பேர் படுகாயம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை, கெதெதென்ன பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பேருந்தும், மரங்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 11 பயணிகள் காயமடைந்து, கஹவத்தை ஆரம்ப  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து  இன்று (12) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என  கஹவத்தை பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற , இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பேருந்தும், மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரங்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்துக்கான காரணம் லாரி ஓட்டுநரின் அலட்சியமே என்று பொலிஸ் கூறுகிறது. லாரி ஒரு வளைவில் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, முன்னால் வந்த பேருந்தில் மோதியதாக கஹவத்தை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .