2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

காட்மோர் த.வியில் திறன் வகுப்பறை திறப்பு

Kogilavani   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் கல்வி வயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்றையின் திறப்பு விழாவும் திறன் பலகையை கையளிக்கும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் கந்தையா மகேந்திரன் தலைமையில், நேற்று (30) முன்தினம் நடைபெற்றது. 

ஐ.எம் எய்ச்.ஒ. நிறுவனம் மற்றும் ரட்ணம் பவுண்டேசன் ஆகியவற்றின் நிதி பங்களிப்பில் இந்தத்திறன் பலகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வில் அதிதியாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீதரன், ஐ.எம்.எய்ச்.ஒ  நிறுவனத்தின் முகாமையாளர் கே.விக்னேஸ்வரன், ரட்ணம் பவுண்டேசன் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X