2024 மே 11, சனிக்கிழமை

காணாமல் போன பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்கப்பட்டார்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன செனவிரத்ன

நல்லதண்ணி பொலிஸ்  நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்டாக கடமையாற்றிய ஒருவர், கடமைகள் முடிந்து கெலிஓயா பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் காணாமல் போன அவரது சடலம், மகாவலி கங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய சமரநாயக்க என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் ( 29) தனது கடமைகளை முடித்துக்கொண்டு கெலிஓயா நகருக்கு வருகைத் தந்த அவர், அதிகம் மழை காரணமாக வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகும் என வீட்டாருக்கு அலைபேசி ஊடாக அறிவித்த பின்னர், அவருடனான தொடர்பு துண்டி​க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று  (30) இராணுவத்தினரின் உதவியுடன் பேராதனை பொலிஸார் மகாவலி கங்கையில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த போது, குறித்த சார்ஜனின் பயணப் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (1) அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .