Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
காலாவதியான முட்டாசு (பைட்) பக்கெட்டுக்களை, விற்பனைக்காக வைத்திருந்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட வியாபாரி ஒருவருக்கு, பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவன் திஸாநாயக்க, 7,500 ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
பலாங்கொடை பின்னவலை பிரதேச வியாபார நிலையமொன்றின் உரிமையாளருக்கே, மேற்படி அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இம்புல்பே சுகாதார பிரிவின் பொதுசுகாதார பரிசோதகர்கள், மேற்படிப் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் நடத்திய திடீர் பரிசோதனையின்போது, குறித்த வியாபார நிலையில், காலாவதியான முட்டாசு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago