2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

காவத்தை பிரச்சினையை கையிலெடுத்தார் பிரதீப்

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடனும் பிரதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை, காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதானியைத் தொடர்புகொண்ட பிரதி அமைச்சர் பிரதீப், எதற்காகத் தோட்டப்பகுதியில் இவ்வாறான கட்டமைப்பு (கறுப்பு கும்பல்) உருவாக்கப்பட்டது? இதன் பின்புலம் என்ன? என்பது பற்றி விளக்கம் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; அவ்வாறு இல்லையேல் அதே இடத்தில் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .