2026 ஜனவரி 21, புதன்கிழமை

கிளிகளை அடைத்தவருக்கு அபராதம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 08 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

கிளிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபரொருவருக்கு 20,000
ரூபாய் அபராதம் செலுத்துமாறு, பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவன்
திசாநாயக்க நேற்று முன்தினம் (6) உத்தரவிட்டுள்ளார்.

11 கிளிகளை விற்பனை நிலையமொன்றில் காட்சிபடுத்திய பலாங்கொடை- ஹுனுகும்புர
பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அபராதத்தை செலுத்தியுள்ளார். குறித்த 11 கிளிகளும் ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த போதே, வனஜீவராசிகள் திணைக்கள
அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட கிளிகள், நீதிமன்ற உத்தரவுக்கமைய, பலாங்கொடை வனப்பகுதியில் பறக்கவிடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X