Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2018 ஜூலை 02 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலிய குயின்லென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு உள்ளான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில், இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் 16 பெண்களும் 4 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் எனத் தோட்ட நிர்வகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 18 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்றும், மூவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
8 hours ago
10 May 2025