Editorial / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08) வெளியேற்றப்பட்டதாக நல்லத்தண்ணி கிராம அலுவலர் திருமதி டபிள்யூ.எம். சசிகுமாரி தெரிவித்தார்.
நிலச்சரிவு சுமார் 25 அடி நீளம் கொண்டது, நில வெடிப்பு தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கிராம அலுவலர் சசிகுமாரி தெரிவித்தார்.
வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது தற்காலிகமாக நல்லத்தண்ணி, தமிழ் வித்தியாலயம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையத்தில் தங்கியுள்ளனர், மேலும் 129 பாடசாலை மாணவர்களும் சிறப்புத் தேவைகள் உள்ள ஒருவரும் உள்ளனர் என்று திருமதி சசிகுமாரி கூறினார்.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் பேரிடர் பிரிவு, வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago