Janu / 2024 மே 14 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹா நகரில் உள்ள இரு வீடுகளும் , ஒரு வியாபார நிலையமொன்றும் உடைக்கப்பட்டு , தங்க நகைகள் , 4 பவுன் பெறுமதியான தாலிகொடி,ஆப்பிள் கையடக்க தொலைபேசி மற்றும் மவுன்டன் துவிச்சக்கர வண்டி ஒன்று திருடி சென்றுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது .
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களால் கலஹா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணையின்போது , கலஹா நில்லம்பை பகுதியை சேர்ந்த 15 வயதுடையை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தின் ஆஜர் படுத்துவதட்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
நவி


4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025