Kogilavani / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொட்டகலை நகரிலுள்ள ஒருவருக்கும் கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியில் 33 பேருக்கு மேற்கொண்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள், நேற்று (29) மாலை கிடைக்கப்பெற்ற நிலையில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவரின் வீட்டிலுள்ள மற்றொருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் போலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய கொட்டகலை நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago