2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் தகனம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்த நபரின் சடலம், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, நோர்வூட் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தகனசாலையில் தகனம் செய்யப்பட்டது.

கல்மலை ஹப்புகஸ்தலாவ வீதி, நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.

கிழங்கன் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கலன்பண்டார தலைமையில் இடம்பெற்ற பிரேதப் பரிசோதனையின் பின்னர், அவரது சடலம் நோர்வூட் தகனசாலைக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X