2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொரோனாவுக்கு ஆண் சிசு மரணம்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.தி பெருமாள்

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த சிசு, கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளது.

பிரசவத்துக்காக அப்பெண், டிக்கோயா-கிளங்கன் மகப்​பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

பெண்ணின் கணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொ​ரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்விருவரும் ஒரே வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அப்பெண், ஆண் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார். அச்சிசு இறந்துவிட்டது. சிசுவுக்குச் செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X