Kogilavani / 2017 ஜூலை 04 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.கணேசன்
மத்திய மாகாணத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணத் தர பரீட்சையின் கணிதப் பாடப்பிரிவில், மாணவர்கள் திறமையான சித்தியை பெறுவதற்கு காரணமாகிவிருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கௌரிவிக்கும் நிகழ்வு, ஹட்டன், சீடா வள நிலையத்தில் அண்மையில், நடைபெற்றது.
கணித பாட பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில், யாழ்.இந்து கல்லூரியின் 1992ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் முன்னெடுத்து வரும் Race For Education திட்டத்தின் கீழ், மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.
இத்திட்டத்தின் மத்திய மாகாண இணைப்பாளர் பொன்னம்பலம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எ.சத்தியேந்திரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .