2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு வைப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.,இராமச்சந்திரன்

தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா பிரிவில்  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை அமைக்க, அமைச்சர் பி. திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்றுப் புதன்கிழமை (29) நடைபெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆர். சிவானந்தன், பி. ரவிச்சந்திரன் மற்றும் டிரஸ்ட்  நிறுவனத்தின் பிரதம ,யக்குனர் லால் பெரேரா உட்பட பலர்  இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .