2024 மே 04, சனிக்கிழமை

சர்ச்சைக்குரிய காணி நுவரெலியா பிரதேச சபையிடமே கையளிக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 ஜூன் 30 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை நகரில் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் கொங்கோடியா தோட்டத்திற்கு சொந்தமான 80 பேர்ச் காணியை நுவரெலியா பிரதேச சபைக்கு தோட்ட நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக நேற்று  (29) கையளித்துள்ளது.

குறித்த காணியை,   நுவரெலியா பிரதேச சபை தவிசாளர்  வேலு யோகராஜ் கையகப்படுத்தி, மோசடி செய்தார் என தகவல்கள் வெளிவந்த நிலையில்,

இக் காணிக்குரிய 32லட்சத்து36ஆராயிரத்து554ரூபாய்74சதத்தை காசோலை மூலம் செலுத்தி,  உடப்புஸ்ஸலாவை பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் கொங்கோடியா தோட்ட காணியை, நுவரெலியா பிரதேசசபை கையேற்றுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தையும் தோட்ட நிர்வாகம் நுவரெலியா பிரதேச சபைக்கு வழங்கியுள்ளதாக தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .