Freelancer / 2023 மார்ச் 16 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச். எம். ஹேவா
மலையத்தில் மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வீதிகளில் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு எச்சரித்துள்ளது.
மழை காரணமாக ஹட்டன் வீதிகள் வழுக்கும் தன்மையில் உள்ளதால் அவ்வீதிகளில் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலைமைகள் தொடர்பில் சகல சாரதிகளும் அவதானம் செலுத்தி, இவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானமாக செலுத்த வேண்டுமென அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவளை, வட்டவளை, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளேயர், தலவாக்கலை, ரதெல்ல, நானுஓயா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுகின்றன.
எனவே, இவ்வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago