Ilango Bharathy / 2021 ஜூலை 09 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனாத் தொற்றாளர்கள் உள்ள சிகிச்சை நிலையமொன்றுக்கு, கஞ்சா,பீடி மற்றும் புகையிலை ஆகியவற்றைக் கொண்டுச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை காவத்தைப் பொலிஸார் நேற்று முன்தினம்(6) கைது செய்துள்ளனர்.
காவத்தை - வெல்லத்துரயில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு இவற்றை எடுத்துச் செல்ல முயற்சித்த போதே, சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 3 கிராம் கஞ்சா, இரண்டு பீடிக்கட்டுகள், ஒரு தீப்பெட்டி மற்றும் ஒரு புகையிலைக் கட்டு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இதேவேளை, இச்சந்தேக நபர் இவற்றை யாருக்கு எடுத்துச் சென்றார் என்பது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026