Freelancer / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள மூன்று மரங்களில் மூன்று குளவி கூடுகள் உள்ளன.
அந்த கூடுகளில் உள்ள குளவிகளால் அங்கு விளையாடும் சிறார்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபை கவனம் செலுத்தி, அந்த குளவிக்கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்கிளைகளிலேயே குளவிகள் கூடுகளைக் கட்டியுள்ளன. கிளைகள் முறிந்து விழுந்தால், பாரிய ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துளனர்.
செ.தி.பெருமாள்
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026