2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுவர், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 15 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம். பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான குற்றச்செயல்கள்
அதிகரித்து வருவதாக, இம்மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தை பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் 20 பெண்கள்
மற்றும் சிறுவர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 15 பெண்களும் 5 சிறுவர்களும்
உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்மாவட்டத்தில் இடம்பெற்ற 416 குற்றச்செயல்களில் 145 பெண்களும் 25
சிறுவர்களுக்கும் எதிராக பாலியல் தொடர்பான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது.



இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 17 பொலிஸ் பிரிவுகளிலும் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான
பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .