2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சில தனியார் பஸ் சாரதிகளின் செயற்பாட்டால் ஏனையோர் பாதிப்பு

R.Maheshwary   / 2022 மே 26 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்  ராஜபக்‌ஷ

ஹட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து தினமும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் சில தனியார் பஸ் சாரிதகளும் நடத்துனர்களும் தமத பஸ்களில் உள்ள டீசலை கேன்களில் நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் டீசலைப் பெறும் நோக்கிலேயே, வரிசையில் தமது பஸ்களை நிறுத்தி இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக வரிசையில் நிற்கும் ஏனைய வாகனங்களின் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

பஸ்களுக்கு வரையறையின்றி டீசல் விநியோகிக்கப்படும் நிலையில், சில தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் சில வாகனங்களுக்கு டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .