Editorial / 2023 ஜூலை 30 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மஸ்கெலிய காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தை பார்வையிட்ட பிறகு ஹட்டன் மாவட்ட நீதவானுக்கு தகவல் வழங்கியுள்ளனார்.
சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை (29) வருகைதந்த ஹட்டன் மாவட்ட பதில் நீதவான், சடலத்தை பார்வையிட்ட பிறகு, பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய தனலெட்சுமி என்ற பெண்ணின் சடலமாக இவ்வாறு மீட்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
8 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
32 minute ago