2025 மே 12, திங்கட்கிழமை

ஜீவனின் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி

Freelancer   / 2023 ஜூலை 14 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மலையகம் - 200 விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அரச அங்கீகாரத்துடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் மலையகம் - 200 எனும் பெருவிழாவை நடத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அரச அங்கீகாரத்துடன் மலையகம் - 200 விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்கள் கொழும்பிலும் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், மலையகம் - 200 தொடர்பில் பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழகங்கள் மட்டத்திலும், இதர பிரிவுகளிலும் போட்டிகளையும் நடத்துவதற்கும் ஆக்கங்கள் மற்றும் படைப்புகளை கோருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், விசேட ஊடக சந்திப்பின் ஊடாக
திகதி, கால நேரம் உள்ளிட்ட விபரங்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

மலையக தமிழர்களின் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவையை கௌரவிப்பதற்கு அரசு தீர்மானித்திருந்த நிலையில், அதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கே அமைச்சரால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது. மலையகம் - 200 நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், இராஜதந்திரிகள், கலைஞர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X