2025 ஜூன் 28, சனிக்கிழமை

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

தலவாக்கலை ட்ஷரூப் தோட்டத்தில் பாவனைக்குதவாத கோதுமை மாவை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை மா பொதியில் பாவனைக் காலத்துக்கான திகதி காலாவதியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தொழிலாளர்கள் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் காரியலாயத்துக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட நுவரெலியா பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள், கோதுமை மாவை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .