Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அந்த பேச்சுவார்த்தையை நடத்துதவதற்கான திகதியை குறிப்பிடுமாறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முதலாளிமார் சம்மேளத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இ.தொ.கா.வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஒரு சுமூகமான தீர்வை காண்பதற்கு இ.தொ.கா முன்வந்துள்ளது.
இந்த சம்பள பிரச்சினை தொடர்பாக தொழிற்சங்கங்கள் பல தத்தம் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இது தொடர்பான பேச்சுக்களை, கருத்துக்களை ஊடகங்களிலும் வெளியிட்டு வருகின்றன. எனினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்தோடு பேச்சு நடாத்தும் சக்தி இ.தொ.காவுக்கே உண்டு. இதை இதர பல தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
விலைவாசிகள் உயர்வால் தங்களின் நாளாந்த வாழ்க்கையையே சுமூகமாக நடத்துவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இதுவரை குறைக்கப்படவில்லை. தீபாவளித் திருநாளை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முன்னர் சம்பள பிரச்சனைக்கு ஒரு காத்திரமான முடிவை எட்ட இ.தொ.கா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக பேச்சு வார்த்தைக்கான திகதியை காலதாமதமின்றி அறிவிக்குமாறு இ.தொ.கா கோரிக்கை விடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிற்சங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து மாறுபட்ட தொகையை குறிப்பிடுகின்றன. எனினும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க நியாயப்பூர்வமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இ.தொ.கா இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago