2025 ஜூன் 25, புதன்கிழமை

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு ஏற்றப்படும்; தடுப்பூசிகளுக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாகப் பெற்றோர்; தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்தில் தமது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது போனால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து, நோய்த்தொற்றுக்கு உள்ளாகக்கூடும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியிடம்  வினவியபோது, 'மேற்படி தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன்  அவற்றைக் குழந்தைகளுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் குறிப்பிட்டார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .