Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 13 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
குடும்பச் சண்டையில், ஐந்த மாதப் பெண் சிசுவொன்று, பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம், பதுளை - கந்தகெட்டிய, முதுகமுவ பிரதேசத்தில், நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதென, கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், என்.எம்.சமுதிகா செவ்வந்தி என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.
மேற்படிச் சிசுவின் தாயும் தந்தையும், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனரெனவும் வாய்த்தர்க்கம் முற்றியதில், தாயை விறகுக் கட்டையால் தந்தை தாக்கியுள்ளாரென்றும் அந்த அடி, தாயின் கையிலிருந்த சிசுவின் கழுத்தில் பட்டதில், அந்தச் சிசு, படுகாயமடைந்து உள்ளதென்றும் தெரியவருகிறது.
சிகிச்சைக்காக அந்தச் சிசு, மீகஹாகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக, பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர் தலைமறைவாகி உள்ளாரென்றும் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
2 hours ago