2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தபால் நிலையங்கள் முழுமையாய் முடங்கின

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறும் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தபால் ஊழியர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டம் இன்றும் (04) தொடர்ந்தது. இந்தப் போராட்டம் ஜூன் 29ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. 

இதனால், நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல தபால் நிலையங்கள், உப- தபால் நிலையங்களில் உள்ளிட்டவற்றின் சேவைகள் யாவும் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

தபால், உப- தபால் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகைதந்திருந்த பலரும் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .