2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தலவாக்கலை கவனயீர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தலவாக்கலையில் நாளை நடத்தத் திட்டமிட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோஸ்ரீதரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம், 620 ரூபாயிலிருந்து 730 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் ஜோன்செனவிரட்ன, நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இதனையடுத்து, தலவாக்கலையில் நாளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .