2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தலவாக்கலையில் 9 மாணவர்கள் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவந்த 9 மாணவர்களை தலவாக்கலை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனாதாக கூறப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி மென்பொருள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரிலே மேற்படி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர் செய்த முறைப்பாட்டுக்கமைய இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இவர்களது வீடுகளிலிருந்து  கணினி மென்பொருட்கள் பலவற்றையும் மீட்டுள்ளனர்.

இம்மாணவர்களை நாளை வியாழக்கிழமை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .