2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தில்ஷானை தேடும் பணிகள் ​தொடர்கின்றன

R.Maheshwary   / 2022 ஜனவரி 25 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

தனது நண்பருடன் மாத்தளை- சுதுகங்கைக்கு நீராடச் சென்ற 17 வயது இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (24) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் வர்ணபூச்சு வேலைக்குச் சென்றிருந்த குறித்த இளைஞன், அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் தனது நண்பருடன் சுதுகங்கைக்கு நீராட சென்று காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன் மாத்தளை- உன்னஸ்கிரிய புதிய நாகல பகுதியைச் சேர்ந்த பிள்ளைநாதன் தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று (25) காலை வரை காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .