2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தெமோதரை, செளதம் பாடசாலைக்கு புதிய பாலம்

Freelancer   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமோதரை தோட்டத்திலுள்ள செளதம் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் மரகட்டைகளாலான பாலம் புதுப்பிக்கப்பட்டு, பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானால் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

தெமோதரை தோட்டத்திலுள்ள செளதம் பாடசாலைக்கு, அதிக மழை காலப்பகுதியில் மரகட்டைகளாலான பாலத்தின் ஊடாக பாடசாலைக்கு செல்ல  மாணவர்கள்  அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இவ்விடயம், செந்தில்  தொண்டமானிடம்  கவனத்துக்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் கொண்டுசெல்லப்பட்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இப்பாலம் புதுப்பிக்கப்பட்டு  மாணவர்களின் பாவணைக்கு கையளிக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டமானது, செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X