2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நானுஓய விபத்தில் ஒருவர் பலி: எழுவர் காயம்

Gavitha   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், டி. சந்ரு

நுவரெலியா, நானுஒய - ரதல்ல வீதியில், இன்றுக் காலை (01) 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்தோடு, 7 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீதி வழியாக பயணித்த லொறி, வீதியை விட்டு விலகி குடைசாய்ததால், லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், நுவரெலியா ​ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 3 பெண்களும் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, ராகலை பகுதியில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த லொறியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் ராகலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .