2025 ஜூலை 16, புதன்கிழமை

நானுஓயாவில் கத்திக்குத்து: சகோதரர்கள் சரண்

Editorial   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு செ.திவாகரன்

நானுஓயா பிரதான நகரில் திங்கட்கிழமை   (07)  காலை இடம்பெற்ற வாக்குவாதத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் காயமடைந்தார்.

இதில் படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலைய வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதலால் இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது

  கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும் , இவர்கள் இருவரும் தானாகவே  நானுஓயா நிலையத்தில் சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .