Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாயொன்று பலியான நிலையில், 26 வயதான நபரும் மரணமடைந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் வியாழக்கிழமை (14) அதிகாலை 2.15 மணியளவில் கரமெட்டிய பலகொல்லவில் 28வது கிலோமீட்டர் மைல்கல் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பதுலுஓயா, கண்டகெட்டிய, கரமெட்டிய, பேக்கரி ஹவுஸைச் சேர்ந்த 26 வயதுடைய கோரலகே மிலிந்த மதுமல் என்ற இளைஞர் ஆவார்.
மீகஹகிவுல பகுதியில் இருந்து கரமெட்டியவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த இளைஞர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து குறித்து கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025