Editorial / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ,எஸ்.சதீஸ்
நுவரெலியா மாநகர சபையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால தொடக்க விழா நுவரெலியா பொதுச் சந்தைக்கு எதிரே உள்ள பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.
மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேயமசிங்க நுவரெலியா மாநகர சபையின் மாநகர ஆணையாளர் விஜேகோன் பண்டாரவின் ஏற்பாட்டில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
தொடக்க விழா, பாடசாலை மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறையினரின் பங்கேற்புடன் பல கலாச்சார மற்றும் இசை நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக இருந்தது.
நுவரெலியா வசந்த காலம் ஏப்ரல் (30) வரை நடைபெறும், அந்தக் காலகட்டத்தில், நுவரெலியா நகர எல்லையை மையமாகக் கொண்டு திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், குதிரைப் பந்தயங்கள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள், மலர் கண்காட்சிகள் மற்றும் பல நிகழ்வுகளை நடத்த நுவரெலியா நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நுவரெலியா வசந்த காலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்புத் திட்டம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.








9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025