2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நூரளை பிரதேச சபையின் கடமைக்கு பாதிப்பு இல்லை

Kogilavani   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா பிரதேச சபையின் நானுஓயா பிரதான காரியாலயம், கந்தப்பளை  உப காரியாலயம் ஆகியவற்றின்  கடமைகள்  வழமைப்போலவே  இடம்பெற்று  வருவதாக  நுவரெலியா  பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார். 

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து, அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தன்னையும் சுகாதார பிரிவின் தனிமையில் இருக்குமாறு அறிவித்ததாகத் தெரிவித்தார்.

தான் தனிமைப்படுத்தலில் இருந்தபோதும் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், நுவரெலியா  பிரதேச சபையின்  நடவடிக்கைகளுக்கு  எந்த  பாதகமும்  ஏற்படவில்லை  என்றும் சபையின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சுகாதார  வழிமுறைக்கு  அமைவாக  ஊழியர்கள் மற்றும்  உத்தியோகத்தர்கள்  கடமைகளை  முன்னெடுப்பதாகவும்  தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பிரதேச சபையின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X