Kogilavani / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் நாளை (7) முதல் காலவரையறையின்றி மூடப்படவுள்ளதாக, மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் செயற்படும் பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை கடந்த 28ஆம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1,500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இதனால் அப்பாடசாலையின் அதிபர் உட்பட 76 ஆசிரியர்களையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி 150 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி ஆசிரியருடன் தொடர்பைப் பேணிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இன்று (7) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு உட்பிரவேசிக்க கூடாது என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026