2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

போலி நாணயத்தாளுடன் கைதான, இராகலையை சேர்ந்த சுப்ரமணியம் விஜயராஜா என்பவரை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரசிங்க, இன்று(19) உத்தரவிட்டார்.

மேற்படி நபர், பதுளை மாநகரிலுள்ள வர்த்தகரொருவருக்கு போலி நாணயத்தாளை வழங்குவதற்கு வந்ததாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை தொடர்ந்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார்,  அந்நபரை கைதுசெய்துள்ளதுடன் ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான 71 போலி நாணயத்தாள்களையும் நூறு ரூபாய் பெறுமதியான 20 போலி அமெரிக்க டொலர்களையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

பதுளையைச் சேர்ந்த வர்த்தகரொருவரும் இப்போலி நாணயத்தாள் விடயத்தில் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X